ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

'புவன்' எர்த் 3டி மேப் : இஸ்ரோ தொடங்கியது

முப்பரிமாண செய்மதி நோக்கு புவி காட்சி (வரைபடம்)


கூகிள் எர்த்-ன் ஒரு பகுதியாக 'புவன்' என்ற பெயரில் இந்தியாவின் எந்தவொரு சிறு பகுதியையும் கணினியில் அமர்ந்து கொண்டே தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலான முப்பரிமாண (3D) வரைபடத்தை உள்ளடக்கிய இணைய தளத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளம் மூலம் செயற்கைக்கோளில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் வரைபடத்தை கண்டுணர முடியும்.

இதற்கான இணையதளமான http://bhuvan.nrsc.gov.in -ன் பீட்டா வடிவத்தை பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரிதிவிராஜ் சவான் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்திய வானவியல் சங்கம் சார்பில், 21ஆம் நூற்றாண்டில் இந்திய விண்வெளித் துறை எதிர்கொள்ளும் சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது.

ராணுவப் பகுதி மற்றும் அணு சக்தி நிலையம் நீங்கலாக இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் இந்த இணைய தளம் மூலம் துல்லியமாக காணலாம் என்று இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி : வெப்துனியா
Source : http://tamil.webdunia.com/newsworld/news/national/0908/12/1090812088_1.htm

புதன், 12 ஆகஸ்ட், 2009

பன்றி காய்ச்சல் - ஒரு தடுப்பு நடவடிக்கை

வெளி நாடுகளில் மட்டுமே பரவி வந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் அதிலும் சென்னையிலும் வேகமாக பரவத் துவங்கி உள்ளது. பன்றி காய்ச்சல் நோய் பற்றி மக்கள் அதிகம் பீதி அடைய தேவை இல்லை.



பன்றி காய்ச்சல் என்றல் என்ன ?

பன்றி காய்ச்சல் எனபது “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது இது ஒரு “ஆர் தோமைசோ வெரிடேட்” என்கின்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே ஐந்து வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.


பன்றி காய்ச்சலின் நோயின் அறிகுறிகள் என்ன ?

தொண்டையில் வலி ஏற்படுதல், மூக்கில் நீர்வடிதல், இடைவிடாத காய்ச்சல், மயக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும் இம்மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான மருந்து முறைகளை மேற்கொண்டும் குணமாகவில்லை என்றல் அதற்கு காரணம் பன்றி காய்ச்சல்தான் என்று தெரிந்துக்கொள்ளலாம்.




பன்றி காய்ச்சல்
நோய் பரவாமல் தடுப்பது எப்படி ?

1. மருத்துவமனைகளுக்கு சென்று வந்தால் ஒரு முறை குளித்து விடுவது நல்லது.

2. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் சிறிது காலங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

3. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச வேண்டாம். (அதே நேரத்தில் அவர்களிடம் வெறுப்பை காட்டாமல் அவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும்.)

4. வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாற்றம் இருந்தால் மாநகராட்சியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க சொல்லவும்.

5. இந்நோயால் பாதிக்கப்பட்டது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பன்றி காய்ச்சல் தடுப்பு மருத்துவமனைக்கு செல்லவும்.


ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது

ஆனால் ,வேப்பிலை காப்பு,தோரணம் முலமாக வைரஸ் பரவலை தடுக்கலாம் .நிலவேம்பு குடிநீர் ,ஆமுக்கிராசூரணம் ,பிரமானந்த பைரவம் ,மற்றும் துளசி செடி அதன் ரசம் நல்ல பலனைக்கொடுக்கும்.


இதுவும் ,காமாலை ,அம்மை மற்றும் சிக்கன் குன்னியா போன்ற ஒரு வைரஸ் கிருமி தொற்று அனுபவம் உள்ளவர்கள் எளிதில் மீளலாம் தன்னபிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள்



சனி, 1 ஆகஸ்ட், 2009

ஆஸ்கார் இசை விருதும் ,தங்க தமிழ் மகனின் இன உணர்வும் !!!

அவன் பாரறிந்த இசைவாணன் ,தமிழ்ப்பாணன் .
உலகறியா தங்கதமிழிசை மூலம் முடிதரித்தவன்
மானிடர் மனந்துள்ளும் மட்சியரிந்தவன் !!!
ஓர் முடி அது என் தமிழ்க்கொடி (புலிக்கொடி)
தீவினை (ஊழ்வினை) காலமாடும்போது
ஒருசொல்லில் பாருக்கு சொல்லவான் என்றிருந்தேன் ?
சொன்னானா? இல்லையே ?
புலையன் எனக்கு புத்தி பேதலித்து
பித்தனாகி வெதும்பும்,முடியா கோடையில் ,
மறந்திலேன் மறந்திலேன் என மார்தட்டி நிற்கின்றான் !!!

வீழ்ந்த ஈழக் கதை ,
கதை இல்லை , விதை
பட்டம் பார்த்து விதைக்க
மறந்திலேன் மறந்திலேன் என மார்தட்டி நிற்கின்றான் !!!

ஈழவிதை ஆழ்மனதில் வை
ஆடிப்பட்டம் தேடி விதை ,,,,,,,,,,,,,,


இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்ததால் பாராட்டு விழாக்களை தவிர்த்தேன்: ஏ.ஆர்.ரகுமான்

இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்ததால் தமிழ்நாட்டில் தமக்கு பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாக்களை தவிர்த்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமுடன் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்புரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:

2 மாதங்கள் அமெரிக்காவில் இசை அமைத்துவிட்டு இந்தியா திரும்பி வந்து நான் கலந்துகொள்ளும் 2 வது விழா இது. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்டபோது முத்துமழை பெய்தது போல் இருந்தது. ஆஸ்கார் விருதுக்கு பிறகு ஏராளமான பாராட்டுகள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருகின்றன.

ஆனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்த சூழ்நிலை, தமிழ் நெஞ்சங்களுக்கு இலங்கையில் நடந்த போர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தமிழகத்தில் பாராட்டு விழாக்களை தவிர்த்துக்கொண்டேன். இதனால் யாருக்கும் மனக்கஷ்டம் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.