ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

புதன், 20 மே, 2009

( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உளவியல் பார்வை...

பொதுவாக எல்லா இனத்துக்கும் சூடு சொரனை இருக்கின்றது அது சற்றே மங்கிபோய் பெருமளவு அலட்சியத்துடன் இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.அதற்க்கு காரணம் என்ன என்பதை அலசுவோம்.

தாய் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு நடத்தியது போலதான் பல்வேறு சமுகத்து மக்களும் சென்றார்கள், ஆனால் தமிழன் வித்யாசமானவன். அவன் புத்திசாலி, கடுமையான உழைப்பாளி. பல சமுகத்தினர் புத்திசாலி மற்றும் உழைப்பு இல்லை என்றாலும் ஒற்றுமையானவர்கள். அதனால் மற்ற சமுதாய மக்கள் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அவர்களின் ஒற்றுமையால் சேதாரம் குறைவாக இருக்கின்றது. ஒற்றுமையின்மையால் தமிழனுக்கு சேதாரம் அதிகமாக இருக்கின்றது.

தாய் தமிழர்களான நாம் இலங்கையில் நம் இனம் கொத்து கொத்தாக இறந்த போது நாம் என்ன செய்தோம். உலக அளவில் சர்வதேச சமுக மக்களை நம் பக்கம் பார்க்க ஏதாவது செய்தோமா? அல்லது வட இந்திய மக்களுக்காகவாவது நமது பிரச்சனைகளை புரிய வைத்தோமா? ஏதும் இல்லை....சொரனையற்ற சமுகமாகவே தாய் தமிழக மக்கள் இப்படி இருக்க என்ன காரணம், இந்த மனோபாவம் எப்படி வந்தது?.

பிரபாகரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாஸ்பரஸ் கு்ண்டு போட்டு கொண்று விட்டார்கள் என்று சொல்லியும், “எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?” என்பதான மனநிலையில்தான் தாய் தமிழகத்தினர் இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் கீழே....

1. கடந்த 300 வருடங்களாக தமிழகத்தில் வாழும் நம் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள், சற்றே யோசித்தால் சுதந்திர போராட்டத்தில்ஒரு சில போராட்டங்களை தவிர பெரிய உயிரிழப்புகள் வட இந்தியாவில் மட்டுமே. மொகலாய படையெடுப்பு உயிர் இழப்புகள்உட்பட.

2.தனுஷ்கோடி கடல் கோள் அழிவு மற்றும் சுனாமி அழிவை தவிர பெரிய பேரழிவுகளை தாய் தமிழன் சந்தித்தது இல்லை.

3. கொள்ளை நோய்கள் அவ்வப்போது எட்டிபார்த்தாலும் அது பெரிய அளவு இழப்புகளை தமிழகம் சந்தித்தது இல்லை.

4.பசி, பட்டினி என்று சோத்துக்காக சோமாலிய மக்கள் போல் குடும்ப்த்துடன் ஒடியது இல்லை.

5.வாடகைவீட்டில் காலி செய்வதையே அலுத்துக்கொண்டு மற்ற இடத்துக்கு குடும்பத்துடன் இடப்பெயர்வு செய்யும் போது கட்டிய துணியுடன் இலங்கை தமிழர்கள் ஆர்மிகாரர்களால் சொந்த வீட்டை விட்டு வெளியேற்றிய அனுபவங்களை தாய் தமிழன் அனுபவித்து இல்லை.

6. மற்ற தேசங்களை போன்று போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு அதனால் ஏற்ப்ட்ட வலிகள் திரைப்படம் மூலமே தாய் தமிழன் உணர்ந்து இருக்கிறான்.(உம்/ஜெர்மன்,ரஷ்யா போரினால் துன்புற்ற மக்கள்),8.நாஜீகளினால் யூதர்களுக்கு நடந்த கொடுமையை சத்தியம் தியேட்டர் லாபியில் இந்து பத்திரிக்கை படித்துக்கொண்டு ஸ்பீல் பெர்க்கின் ஷீன்டலர் லிஸ்ட் பார்த்தே போரினால் ஏற்படும் வலிகளை தாய் தமிழன் அறிந்து இருக்கிறான்.

9.ஒரு தீப்பெட்டி 250ரூபாய் கொடுத்து வாங்கிய அனுபவம் அவனக்கு கிடையாது.

10.சாலை விபத்துகளில் மட்டுமே தாய் தமிழன் முகம் சிதைந்த உடல்களை பார்த்து இருக்கிறான். ஆர்மிக்கரார்களால் பிடித்து செல்லப்பட்ட சகோதரன் சகோதரி முகம் சிதைந்து செத்து்ப்போன உடலை பார்த்த அனுபவம் அவனுக்கு இல்லவே இல்லை.

11.தன் கண் எதிரே ஆர்மீக்காரர்களால் தன் அக்கா தங்கையின் அடையில்லாத மார்பில் கை வைத்து பிறகு உடல் எங்கும் கைவைத்து விளையாடி கெடுத்து கற்பழிக்கும் கொடுமையை எந்த தாய் தமிழனாவது அனுபவித்து இருக்கின்றானா?

12.துப்பாக்கி முனையில் உடன் பிறந்த சகோதரியை உறவு கொண்ட அனுபவம் எந்த தாய் தமிழனுக்காகவாவது இருக்கின்றதா?

13.தமிழகத்தில் ஊரடங்கு உத்திரவை நாம் அனுபவித்தது எப்போது????

14. சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஷெல் அடிக்கும் சத்தம் கேட்டு , சாப்பிட்ட கையோடு பதுங்கு குழியில் போய் குடும்பத்துடன் மூச்சு முட்ட உயிர்பயத்துடன் வாழ்ந்த அனுபவம் நம் எவருக்கேனும் இருக்கின்றதா? நாம் நன்றாக சப்புக்கொட்டி சாப்பிட்டபடி மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருப்போம், அல்லது ஜெயா டிவியில் கயவன் கருனாநிதி என்று அம்மா தொடுக்கும் அறிக்கை போரை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்போம்.

15.நம்மில் யாருக்காவது குடும்பத்துடன் காட்டில் வாழ்ந்த ஆனுபவம் இருக்கின்றதா?

16.பஸ்சில் பயணம் செய்யும் போது யாராவது பிள்ளைதாச்சி வந்தால் எழுந்து சீட் கொடுக்கும் நாம் அவள் வயிறு கிழிந்து ரத்த சகதியின் ஊடே இறந்து போன பிள்ளையை பார்த்து இருக்கின்றோமா?

17. பிள்ளைகள் வெவ்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து, அப்பா அம்மாக்கள் போர் மேகச்சூழலில் சிக்கி தினம் தினம் இன்டெர்நெட்டில் இறந்தவர் பட்டியலில் தன் உறவு பெயர் இருக்கின்றதா? என்று திக் திக் இதயத்துடன் பார்த்து தினம் தினம் செத்து செத்து அனுபவிக்கும் கொடுமையை அனுபவித்தது உண்டா?

18 முளைத்து மூனு இலைவிடாத பிள்ளைகளின் எல் கே ஜீ சீட்டுக்கு 40,000 பணம்கட்ட இரவு முழுவதும் காத்து இருக்கும் தாய் தமிழன் போரினால் ஒரு தலைமுறையே கல்வி கற்றகாத ஒரு சூழலை நினைத்து பார்த்து இருப்பானா?

19. உங்கள் பிள்ளை அல்லது உங்கள் தகப்பன் தலையில் குண்டு காயத்துடன் இறந்த பினத்தையும் உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடுரமாக கொண்று கொண்டு வந்த போட்ட உறவுகளை வாயில் அடித்து கதறி பார்த்து இருக்கின்றீர்களா?


20. மிக முக்கியமா நீங்கள் போற்றி பாதுகாத்து வந்த நூலகம் என்றாவது உங்கள் கண் எதிரில் தீக்கிரை ஆனதுன்டா???

21.நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.

நான் எழுதியது ஒரு சிலதான் இன்னும் எழுதினால் வலைபக்கத்தில் இடம் போதாது. இது போன்ற எந்த பாரிய இழப்புகளையும் சந்திக்காத தாய்தமிழனிடம் ,இன உணர்வு சொரனை,விடுதலை, வேட்கை, இன்ன பிற நான்சென்ஸ் விஷயங்களை தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள், மிக முக்கியமாக தாய் தமிழனை நம்பாதீர்கள். மேலே நான் சொன்ன விஷயங்கள் தாய்தமிழனுக்கு நடக்க வேண்டும் என்று கங்கன்ம் கட்டிக்கொண்டு எழுதியது அல்ல. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இரு் என்பதே. இந்த பதிவு பிரச்சனையின் வீரியம் தாய் தமிழனுக்கு புரியவில்லை என்பதே எவர் மீது தவறு என்று அலசுவது நம் நோக்கம் அல்ல...



இவ்வளவு நடந்தும் ஏதும் நடக்காதது போல வாழ தமிழனால் மட்டும்தான் முடியும்.

(“எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?”)

we are great.


அன்புடன்/ஜாக்கிசேகர்

ஞாயிறு, 10 மே, 2009

எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகியவை இனி தமிழக சிறுநகர,கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா?






சமீபத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு) , ஏ ஐ ஈஈஈ (அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு) நடந்த தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தேன். ஒன்று மதுரையிலும் மற்றொன்று திருச்சியிலும்.

இரண்டு மையங்களிலும் கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம், தன் வாழ்நாளில் பொய்யே பேசாதவர்களின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது. சிறுநகர மாணவர்களின் சதவிகிதம் உண்மை மட்டும் பேசும் அரசியல்வாதிகளின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது.

ஏன் அவர்கள் இந்த தேர்வுகளில்

பங்கெடுத்துக் கொள்வதில்லை?

1. இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லை.


2. இதைப் பற்றி சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு
போதுமான விழிப்புணர்வு இல்லை.

3. கிராமப்புற மாணவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி, படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் ஆகியவை இதைப் பற்றி பெரிய அளவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை அரிதாக சில பக்கங்களை ஒதுக்குகின்றன (கேரியர் கைடன்ஸ் என்ற பெயரில்). ஆனாலும் அவை உற்சாகப் படுத்தும்படி எழுதுவதில்லை. தொடர்ச்சியாகவும் அவர்கள் இப்பணியைச் செய்வதில்லை. எனவே இதழ்களை தவறவிடுபவர்களுக்கு செய்திகள் சேர்வதில்லை.

4. நாளிதழ்கள் தேர்வு பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அதன் முக்கியத்துவம், வாய்ப்பு பற்றி அவை வாய் திறப்பதில்லை.

5. இம்மாதிரியான தேர்வுகள் அனைத்தும் கேந்திரிய வித்யாலயா மாதிரியான பள்ளிகளில் மட்டும் நடத்தப் படுகின்றன. எனவே அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வு எளிதாக ஏற்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிகளையும் மையங்களாகக் கொண்டு இந்தத் தேர்வுகளை நடத்தினால் அங்குள்ளவர்களுக்கும் இது எதற்க்கு நடக்கிறது, படித்தால் என்னவாகலாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படும். இது மற்றவர்களுக்கும் பரவும்.

6. தமிழக அரசின் நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்க்காக பலரும் படித்தார்கள். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேச்ச மாதிரியும் ஆச்சு என்ற கணக்கில் அப்போது பலர் இந்த தேர்வுகளுக்கும் படித்தார்கள். ஆனால் இங்கே நுழைவுத் தேர்வு தளர்த்தப் பட்டதும் இதற்க்கு மட்டும் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து விட்டது.

7. மேலும் தமிழக அரசின் நுழைவுத் தேர்வு காரணமாக பல கோச்சிங் செண்டர்கள் இங்கே இருந்தன. தொழில் போட்டியின் காரணமாக அவர்கள் குறைந்த கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் இப்போது அவை அருகி விட்டன. மதுரை,திருச்சி ஆகியவற்றில் ஏ ஐ ஈ ஈ ஈ நுழைவுத் தேர்வு கோச்சிங்கிக்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள். இவற்றை கிராமப் புற மக்களால் செலுத்த முடிவதில்லை.

8. மேலும் அப்போது சிறு நகரங்களிலும் கோச்சிங் செண்டர்கள் இருந்தன. சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் எளிதில் அங்கு சென்று படித்தார்கள். அவைகள் இப்போது மூடப்பட்டுள்ளதால் எல்லோரும் மாவட்டத் தலைநகருக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அவர்களின் பொருளாதாரம் சம்மதிப்பதில்லை.

ஏன் கோச்சிங் செண்டர்கள் பற்றி அதிக கவலை எனில்,

சமீபத்தில் ஐஐடி சென்னையின் டீன் அவர்கள் அளித்த பேட்டியில் “ இப்போது தேர்வாகிவரும் மாணவர்களிடம் ரா இண்டலிஜெண்ஸ் இல்லை, பயிற்றுவிக்கப்பட்ட திறமையே காணப்படுகிறது? என சொல்லியிருந்தார். எனவே நம் மாணவர்களும் முயற்ச்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அறியாமையின் காரணமாக மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கற்க்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....


1) நமது எம் பிக்களிடம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை பரவலாக கொண்டுவரச் சொல்லி வற்புறுத்தலாம். மக்கள் தொகைக்கு ஏற்பவும், மத்திய அரசு பணியாளர்களின் என்னிக்கைக்கு ஏற்பவும் தான் அப்பள்ளிகள் அமைக்கப்படும். ஆனால் அந்த விகிதத்திலாவது பள்ளிகள் இங்கு அமைக்கப் பட்டுள்ளனவா என்று சரிபார்க்கச் சொல்லலாம்.


2) ஏனெனில் இதுவரை அர்ஜூன் சிங், முரளி மனோகர் ஜோசி என வட மாநிலத்தவர்களே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் அந்த துறையின் செயல்பாடுகள், அதன் பலம் ஆகியவை நம் எம் பிக் களுக்கு தெரிவதில்லை. அந்த துறையில் உள்ள ஓட்டைகள் மூலம் வட மாநில மக்கள் நமக்குச் சேரவேண்டியவற்றை அபகரிப்பது நடந்து வருகிறது.

3) பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கு தேர்தல் நடைபெறும்போது நம் எம்பிக்கள் ரயில்வே,தொலைத் தொடர்பு போன்ற பசையுள்ள நிலை குழுக்களுக்கே முன்னுரிமை கொடுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் மனதுடையோர் மனித வள மேம்பாட்டு அமைச்சக நிலைக்குழுக்களுக்கு போட்டியிடலாம்.

4) எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் சர்வ சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்களை இங்கு ஆக்க பூர்வமாக செயல்படுத்தலாம். புது திட்டங்களையும் நமக்கு கொண்டு வரலாம்.

5) சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது எம் பிக்கள் சாதனைப் பட்டியலைப் பார்த்தேன். அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நிழற்குடை, பள்ளி கட்டடம், தெரு விளக்கு போன்ற உள்ளாட்சித் துறைப் பணிகளை. அவை மத்திய அரசின் எம் பி நிதியில் செய்யப் படும் கடமைகள். எப்படியும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். கமிசனும் கிடைக்கும். ஆனால் ஒரு எம் பி என்பவர் தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்களைப் பெற்றுத் தருபவராகவே இருக்க வேண்டும். அம்மாதிரி எம்பிக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

6) எனவே வெற்றி பெறும் எம்பிக்களை சந்தித்து, மத்திய அரசின் துணையுடன் இங்கு கல்வியை வளர்க்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

7) தற்போது புதிதாக மூன்று ஐஐடிக்கள், ஐஐஐடி டி&எம் ஆகியவை அமைக்கப் படவுள்ளன. இதிலும் ஓபிசிக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. எனவே மத்திய அரசின் ஓபிசி சான்றிதழை வாங்கி விண்ணப்பிக்கவும். நான் சந்தித்த பலர், தமிழக அரசின் பிசி, எம்பிசி சான்றிதழ்கள் போதுமென நினைத்து மத்திய அரசின் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பித்துள்ளார்கள்.

8) உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இதைப் பற்றிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

வேத்தியனின் பக்கம்: பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!

வேத்தியனின் பக்கம்: பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!


புதன், 6 மே, 2009

ஐஏஎஸ் தேர்வு-தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி!!

சென்னை: இந்தாண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் 791 பேர் இந்தத் தேர்வில் வென்றுள்ள நிலையில், இதில் 8ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. கடந்த 2008ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர். இதில் 11,849 பேரே வெற்றி பெற்றனர்.

இவர்களில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் இப்போது 791 பேர் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகப் பதவிகளை ஏற்க உள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள் ஆவர்.

இந்த 791 பேரில் 96 மாணவ, மாணவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தேசிய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் சென்னை அண்ணாநகரில் உள்ள கணேஷ் ஐஏஎஸ் அகாடெமியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் (29) தேசிய அளவில் 9வது ரேங்க்கைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து சென்னை மனித நேயம் அமைப்பு நடத்தும் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற அருண்சுந்தர் தயாளன் 22வது ரேங்க்கையும், கணேஷ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சௌம்யா, சுப்ரஜா, ஆனந்த் ஆகியோர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மனித நேயம் அமைப்பை அதிமுக பிரமுகரான சைதை சா.துரைசாமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் பொதுத் தொண்டில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார்.

மொத்தத்தில் தமிழத்தைப் பொறுத்தவரை கணேஷ் பயிற்சி மையத்தில் பயின்ற 30 பேரும், மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 24 பேரும், சங்கர், சத்யா உள்ளிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

329வது ரேங்க் பிடித்த ஆசிரியை...

இந்தத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரேமி தேசிய அளவில் 329வது ரேங்க்கை பிடித்துள்ளார். இவர் மாத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.

இவர் சென்னை மனித நேய இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்.

விவசாயி மகன்...

அதே போல மேட்டூர் அணை அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் 345வது ரேங்க்கைப் பெற்றுள்ளார். இவர் கோவை உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்தவர்.

இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் அகாடெமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

நன்றி :http://thatstamil.oneindia.in/news/2009/05/05/tn-96-students-from-tn-get-through-ias-exams.html