ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ரேஷன்(கார்டு) கடை சிக்கலா?! ,ஆட்சியரை அழைக்கலாமே

ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமமா?: புகார் தெரிவிக்கலாம் : கலெக்டர் அழைப்பு

அரியலூர்: "ரேஷன் பொருள் பெறுவதில் சிரமம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்' என, அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி விடுத்த அறிக்கை: தமிழ்நாட்டில் மனுதாரரின் விருப்பத்தின் அடிப்படையில், ரேஷன் கார்டுகளுக்கு அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, எந்த பொருளும் தேவையில்லை என்கிற அட்டை என பொதுமக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் கார்டுகள் வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை.

அரிசி தேவை என விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இளம் பச்சை வண்ணத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு அரிசியுடன் மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன. அரிசிக்கு பதிலாக கூடுதல் சர்க்கரை தேவை என விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வெள்ளை நிறத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி தவிர கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொதுவிநியோக திட்ட பொருட்களான செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அனைத்து பொருட்களும் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தாலும், விற்பனையாளர்கள் மீது புகார்கள் ஏதும் இருந்தாலும் அது குறித்து, கீழ்கண்ட டெலிஃபோன் எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

கலெக்டர்: 04329-223351, டி.ஆர்.ஓ., 04329-223321, டி.எஸ்.ஓ., 04329-223351, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், பெரம்பலூர்: 04328-278329, பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர், அரியலூர்: 04329-222131, தாலுகா வழங்கல் அலுவலர், அரியலூர்: 04329-222062, தாலுகா வழங்கல் அலுவலர், ஜெயங்கொண்டம்: 04331-250220, தாலுகா வழங்கல் அலுவலர், செந்துறை: 04329-242320.

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010,01:24 IST
 
நன்றி :தினமலர்

சனி, 19 டிசம்பர், 2009

குறைதீர் நாள் சிறப்புக் கூட்டம் , அரசு வேளாண் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏக்கருக்கு ரூ.6 லட்சம் மின்திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்



அரியலூர்:ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூரில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசியது:ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன்: ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்திற்கு சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்று ரூ.25 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. அதன் விலையை உயர்த்தி தர கோரிக்கை விடுத்தும் ரூ.25 ஆயிரம் இறுதி தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். அந்த பணத்தை கொண்டு மாற்று இடம் வாங்க முடியாத நிலையில் அவர்களது வாழ்வாதாரம் சீரழிந்துள்ளது.

அரசு ரூ.25 ஆயிரம் கொடுத்து வாங்கிய நிலத்திற்குள் பல லட்சம் மதிப்புள்ள "கருப்புத் தங்கம்' என கூறப்படும் நிலக்கரி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளை கலெக்டர் தலைமையில் அழைத்துப் பேசி நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை விலை அளிக்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் படித்த இளைஞருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், குழந்தைகளுக்கு கல்வி உத்தரவாதமும், நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் ஒரு வீடும் அளிக்க வேண்டும்.

அரியலூர் பிச்சைப்பிள்ளை: ஆயில் இன்ஜின் வாங்கினால் மானியம் வழங்கப்படுவது குறித்து விரிவாக விளக்க வேண்டும். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை. எனவே வங்கி அதிகாரிகள், விவசாயிகளை அழைத்து கல்விக்கடன் கூட்டம் நடத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை அரசிடம் நிதி பெற்று விரைவில் செப்பனிட வேண்டும்.

விளந்தை ஜெயச்சந்திரன்: ஆண்டிமடத்தில் வேளாண் அலுவலகம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுவதற்கு இடம் இருந்தும் அது ஒதுக்கப்படாததால் அலுவலகம் கட்டும் பணி துவக்கப்படாமல் உள்ளது. எனவே விரைவில் இடத்தை ஒதுக்கி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஆண்டு வேளாண்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் ரூ.20 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். என்னென்ன பணிகள் நடந்தது என்பது குறித்து கலெக்டர் ஆய்வு நடத்த வேண்டும்.

ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் ஏரி பிளாட் போட்டு விற்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி ஏரியை காப்பாற்ற வேண்டும்.வி.சி.அம்பேத்கர் வழியன் பேசுகையில், புதிதாக திருமணமானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை விரைவில் வழங்க வேண்டும் என்றார். செங்கமுத்து பேசுகையில், அரியலூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு படிப்பிற்கும் எவ்வளவு கடன் வசதி என்பதை வங்கிகள் அறிவிக்க வேண்டும் என்றார். இந்த ஆண்டு விவசாயம் அதிகம்: பின்னர் கலெக்டர்ஆபிரகாம் பதில்அளித்து பேசியதாவது, மாவட்டத்தில் வேளாண்மையை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு வரிசை நெல் களை எடுக்கும் கருவி ரூ.12,500 மானியத்திலும், இயந்திரத்தின் மூலம் பல வரிசை நெல் களை எடுக்கும் கருவி ரூ.20 ஆயிரம் மானியத்திலும், சீனா மாடல் நெல் நடவு இயந்திரம் ரூ.75 ஆயிரம் மானியத்திலும், 10 எச்.பி.க்கு குறைவாக களை எடுக்கும் கருவி ரூ.50 ஆயிரம் மானியத்திலும், பழ மரங்களுக்கு விசை தெளிப்பான் ரூ.20 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

விலை உயர்ந்த வேளாண் கருவிகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் மற்றும் மக்காச்சோளம் அறுவடை இயந்திரம் ஆகியன 33 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. நீர்வள, நிலவளத் திட்டத்தில் ஆணைவாரி ஓடை உபவடிவ நிலப்பகுதியில் உள்ள ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்படும் தெளிப்பு நீர் பாசன அமைப்பிற்கு 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

சிறுபாசனத் திட்டத்தில் விசைத் துளைக்கருவி, நில பவுதீக ஆய்வு கருவி, கைத்துளைக் கருவி போன்றவை வாடகைக்கும் விடப்படுகின்றன. செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.19.20 லட்சம் வரப்பெற்று 36 பண்ணைக்குட்டைகள் ரூ.18 லட்சம் மதிப்பிலும், 4 ரீசார்ஜ் சாப்ட் ரூ.1.20 லட்சம் மதிப்பிலும் அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.நடப்பாண்டில் அரியலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி 21,227 எக்டர் பரப்பளவிலும், கரும்பு விவசாயம் 7,069 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 6,900 எக்டர் பரப்பளவிலும் பயிறு வகைகள் 853 எக்டர் பரப்பளவிலும் என கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிக அளவில் விவசாயம் செய்யப் பட்டுள்ளது.

மேலும் 274.99 மெட்ரிக் டன் விதை நெல்லும், சிறுதானியங்கள் 9,548 மெட்ரிக் டன்னும்,பயிறு வகைகள் 5,537 மெட்ரிக் டன்னும், நிலக்கடலை 34,151 மெட்ரிக் டன்னும் விதை விநியோகம் செய்யப்பட்டு, போதுமான அளவிற்கு விநியோகம் செய்ய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.சம்பா விவசாயத்திற்கு ஏற்ற உரங்கள் வேளாண் துறையில் விநியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் யூரியா 769 மெட்ரிக் டன்னும், டிஏபி 253 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 451மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 468 மெட்ரிக் டன்னும், சூப்பர் உரம் 73 மெட்ரிக் டன்னும் உள்ளன.

விவசாயிகளின் முதன்மை கோரிக்கையான மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அரியலூர் மாவட்டத்தில் உடனடியாக அமைக்கப்படும். பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளின் குறைகள் அடிப்படையில் சிறப்புக் கூட்டம் நடைபெறும். அதுபோல் வங்கியில் விவசாயிகளின் குறைகள் சம்பந்தமான சிறப்புக் கூட்டம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ராதாகிருஷ்ணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராமசாமி, வேளாண் உதவி இயக்குனர்கள் சந்தானகிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் சங்கர், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



சனி, 7 நவம்பர், 2009

இணைய விளம்பரம் அல்லது உளவாளிகளின் உலகம்.

மிஸ்டர் எக்ஸ் வழக்கம் போல இனையத்தில் உலாவிக்கொண்டிருந்தார்(browsing) அவர் ஒரு புத்தக பிரியர் புத்தகங்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் சார்ந்த இணைய தளங்களாக பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.தேடுபொறி (Search Engine) மூலமாக தன் தேடுதலை தொடந்து தேடிபிடித்து படித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் எக்ஸ். பெரும்பாலும் அவரின் இணைய உலாவுதல் இவை சார்ந்தே நிகழும். இடையிடையே புத்தக வெளியீட்டாளர்களுக்கு மின் அஞ்சல் என தொடரும் அவரது உலா. ஆனால் மிஸ்டர் எக்ஸ்க்கு தெரியாது அவரை ஒரு உளவாளி தொடர்வது.........

மிஸ்டர் ஒய்யும் ஒரு இணைய விரும்பிதான் இவருக்கு சினிமா மோகம். நகரத்தில் உள்ள திரை அரங்ககுளில் இனையதளங்களுக்கு தினமும் செல்லாமல் இவருக்கு இரவில் நல்ல தூக்கம் வருவதில்லை. வார விடுமுறைகளில் சினிமா செல்லவில்லையென்றால் ஏதோ ஒன்றை இழந்தது போல இருக்கும் மிஸ்டர் ஒய்க்கு. முன்பதிவு செய்வதெல்லாம் இணையம் மூலமாகத்தான். ஆனால் மிஸ்டர் ஒய்க்கு தெரியாது அவரை ஒரு உளவாளி பின் தொடர்வது.........


மிஸ்டர் எக்ஸ் நியுசிலாந்து சென்றபோதும், மிஸ்டர் ஒய் ஜெர்மனிக்கு சென்றபோதும் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த பொழுது மிஸ்டர் எக்ஸ் உலாவிய பக்கங்களில் உள்ளுரில் உள்ள புத்தக கடைகளின் விளம்பரங்களும், மிஸ்டர் ஒய் உலாவிய பக்கங்களில் உள்ளூர் திரை அரங்குகள் பற்றிய விளம்பரங்களும் வந்தன. எப்படி இது சாத்தியம்? அவரவர் விருப்பம், ரசனைகேற்ப எப்படி விளம்பரங்கள் வருகிறது?


மியூசிக் சேனலில் லீ ஜீன்ஸ் விளம்பரமும் , “தாலி பெண்ணின் வேலி” தொடருக்கு இடைவெளியில் ஆச்சி மசாலா விளம்பரமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை( இளஞர்களை/பெண்களை) இலக்கு வைத்து வரும் விளம்பரங்கள். இதே அடிப்படையில் இன்னும் இலக்கை துள்ளியமாக்கி தனி மனிதர்களை குறிவைத்து வருகின்றன இணைய விளம்பரங்கள். “நடத்தைசார் விளம்பரம்” (Behavioral Advertising) என்ற ஒரு விசயம் உலகம் தழுவி வளர்ந்து வருகிறது.



இந்த விசயம் உங்களுக்கும்,எனக்கும் நிகழும் அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஒரு தனி மனிதன் பழக்க வழக்கங்களின் தொகுதி. அவனின் பழக்க வழக்கங்கள் மூலமாக நாம் அவனை அடையாளப்படுத்திவிட முடியும். அவனின் ஈடுபாடுகளை, அவன் தேவைகளை, அவனின் ரசனையை நாம் கண்டெடுத்துவிட முடியும். இணையத்தில் ஒருவனின் நடத்தையை வைத்தே நாம் ஒருவரை பகுத்துவிட முடிகிறது. அவர் தேடுபொறியில் அவர் தேடும் விசயங்கள், அவர் பார்வையிடும் இணைய தளங்கள், அவர் பதிவிறக்கம் செய்யும் விசயங்கள், அவர் பார்வையிட்ட இணைய தளங்களின் வரலாறு இவைகள் மூலம் நாம் அவரின் ஆளுமையை , அவரின் பாலினத்தை,வயதை,அவரின் இருப்பிடத்தை,அவரின் தனிபட்ட விருப்பங்களை, அவரின் மத ஈடுபாடுகளை , மத சுவேஷங்களை, அவரின் ஆரோக்கியம் அல்லது உடல் நல குறைகளை, காமம் சார்ந்த அவரின் ஈடுபாடுகளை அல்லது காம பிறழ்வுகளை, சமூக,பொருளாதார,அரசியல் குறித்த அவரின் நிலைபாட்டை, பூமி வெப்பமடைவதை பற்றிய அவரின் புரிதலை, தென்இந்திய சமையல், இன்னும் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்திற்கும் அவருக்கும் உள்ள ஊடுபாவுகளை நாம் கணித்துவிடலாம்.


இதை தான் இணையத்தில் இயங்கும் விளம்பர வலையமைப்புக்கள்(AdvertisingNetworks)பயன்படுத்திக்கொள்கின்றன.நாம் ஒரு இணைய தளத்தை பார்வையிடும்பொழுது அந்த இணைய தளம் நம் கணணியில் குக்கீஸ்(cookies) என்ற சின்னசிறு கோப்பை (file)நிறுவி விடுகிறது. நம் இணைய நடவடிக்கைகளை இந்த சின்னசிறு கோப்பு ஒரு அடையாள எண்னோடு தன் இணைய தளத்திற்கோ அல்லது ஒரு விளம்பர வலையமைப்பு நிறுவனத்திற்கோ அனுப்பி வைக்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு உங்களை வகை படுத்துகிறது விளம்பர வலையமைப்பு நிறுவனம்.
பின் நமக்கு தகுந்த விளம்பரங்கள் நம்மை தொடர்கின்றன!! நம்மை பற்றிய தகவலை பெற web bugs, web beacons, Flash cookies. பல தொழில்நுட்பங்களை விளம்பர நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன.




இணைய பயணாளிகளின் தனிபட்ட வாழ்க்கையில் அனுமதியில்லாமல் வேற்று மனிதன் நுழைவு ஒரு வரம்புமீறல் என எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. விளம்பரங்களுக்காக மட்டுமே இந்த தகவல்கள் திரட்டபடுகின்றன என அந்த நிறுவனங்கள் சொன்னாலும் இது ஒரு தனிமனித அந்தரங்கத்தின் மீதான தாக்குதல் எனவும், தனிமனிதனின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.


இங்கிலாந்தில் BT என்ற தொலைதொடர்பு நிறுவனத் திற்காக PHORM என்ற நிறுவனம் BTயின் 30,000 வாடிக்கையாளர்களின் இணைய நடவடிக்கையை தன் பிரத்யேக மென்பொருள் மூலம் கண்காணித்தது பெரிய சர்சையை எழுப்பியிருக்கிறது. அதை தொடந்து நடத்தைசார் விளம்பரங்கள் தனிமனித தகவல் குறித்த விவாதம் அங்கே நடந்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் FEDERAL TRADE COMMISSION இந்த விளம்பர தொழில் நுட்பத்தை தடைசெய்ய முடியாது என வெளிபடையாக சொல்லாமல் விளம்பர வலையமைப்பு நிறுவனங்கள் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளவேண்டும் என்றது. அது முன் வைத்த யோசனைகளில் ஒன்று தங்கள் இணையதளங்களில் என்ன தகவல் திரட்டப்ப்டுகிறது ,எப்படி திரட்டப்படுகிறது என்பதை இணைய தளத்தை உபயோகிப்பவர் அறியும் வண்ணம் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பது.


YAHOO,GOOGLE போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பர வலையிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. கூகுளின் privacy policy பற்றி தெரிந்துக்கொள்ள: http://www.youtube.com/googleprivacy#p/a . yahooவில் privacy policy இணைப்பை தொடந்து செல்லுங்கள். ஆனால் இவையெல்லாம் எவ்வளவு தூரம் நம்பகதன்மை உடையது என்பது தெரியவில்லை





ஒரே கணணியை பல பேர் உபயோகபடுத்தும் சூழலில் ஒரு குறிப்பிட்ட மனிதரை இலக்காக்க முடியாது என்பது ஒரு வாதமாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு மனிதன் எந்த கணணியில் அமர்ந்தாலும் அவனை பின் தொடர தொழில்நுட்பம் தயாராகிவிடும். தனிமனிதனின் தகவல்,அந்தரங்கம்,சமூக பாதுகாப்பு பற்றிய மிக முக்கியமான வாழ்வியல் ஆதாரங்களும் ,இணைய தொழில்நுட்பமும் எதிரெதிரே நிற்கின்றன. சந்தை பொருளாதார திமிங்கலங்கம் தன் பெரிய வாயை திறந்து காத்துக்கிடக்கின்றது


மேலும் புரிதலுக்கு:


http://www.cdt.org/privacy/targeting/

http://www.networkadvertising.org/

http://www.seochat.com/c/a/Website-Marketing-Help/Behavioral-Advertising-Wave-of-the-Future/


நன்றி : திருவாளர் . ஜெ.ஜெயமார்த்தாண்டன்.

வலைப்பூ:கூடுசாலை

திங்கள், 26 அக்டோபர், 2009

ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம்

அன்புள்ள பதிவுலக தோழாமைக்கு www.iloveallaah.blogspot.com
வாழ்க வளமுடன்,உங்களது படைப்புகளின் சிறப்பு ஓங்குக ,யாம் ஒரு ஈழக்காதலன் .

உமது பணி தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாத தமிழ் பணி ,நீங்கள் எமக்காக ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம் .

அரபி இலக்கங்கள்( எண்கள் :1,2,3,4 ,,,,, ) பயன்பாடு உலகெங்கும் ஏற்றுகொள்ளபட்டிருப்பதாக இந்தியாவில் கற்பிக்க படுகிறது .ஆனால் அரபியர்கள் தங்கள் இலக்க பயன்பாட்டை இந்தியர்களிடம் கற்றத்தாக கூறுகின்றனர் .

அரபியர்கள் எண்களை கற்றபோது இந்தியாவே இல்லை .ஆகவே இந்த இலக்கமுறைகள்
சமஸ்கிருதம் மற்றும் உருது அடங்கிய இந்திய மொழிகுடும்பதிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை .ஆனால் தமிழ் (திராவிட) மொழிக்குடும்பத்தில் எண்ணுருக்கள் வெவ்வேறாக இருப்பினும் ஏறத்தாழ ஒரே உச்சரிப்பை கொண்டிப்பதால்
படிமம்:Tamil Numbers.JPG

இந்திய தேசிய அடிமைக்கல்வியின் மேல் எமது ஐயத்தை தெளிவு படுத்துமாறு
ஒரு பதிவில் ஆவணப்படுத்த வேண்டுகிறோம் .
ஈழத்தில் சந்திப்போம்,சிந்திப்போம் .

நன்றியுள்ள
சோழன்

ஓ... கனடா-4

முன்னைய பாகங்கள் இங்கே.My Photo

முகவர்களுக்குக் காசு கொடுத்து பெரிய தொகை ஒன்றையும், என்னுடைய வாழ்க்கையையும் பணயம் வைக்க உறவுகள் விரும்பாததால், அவர்கள் தேர்ந்து எடுத்த முறை படிப்பதற்காக என்று சொல்லி என்னை இலங்கையை விட்டு அப்புறப்படுத்துவது. அதற்கான வழிமுறை இவ்வாறாக இருந்தது.

முதலில் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறவேண்டி இருந்தது. என்னிடம் அதற்குரிய TOFEL, IELTS போன்ற ஆங்கிலத் தகைமகள் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய க.பொ.த. உயர்தர, சாதாரணதர பெறுபேற்று ஆவணங்களில் இருந்த ஆங்கிலத்துக்கான அதிவிசேட சித்தி அவர்களை ஏமாற்றிவிட்டது போலும், அனுமதி கிடைத்தது, ஷெரிடான் கல்லூரியில் மின் பொறியியல் (3 வருட டிப்ளோமா) படிக்க. அத்துடன் ஆறு மாதங்கள் ஆங்கிலமும் படிக்க வேண்டும். ஆக, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரியில் அனுமதி என்கிற கனேடிய குடிவரவு, குடியகல்வு அமைச்சின் முதலாவதும், முக்கியமானதுமான நிபந்தனையைச் செவ்வனே நிறைவேற்றியாயிற்று. இது பற்றிய விபரங்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகுதான் கனேடிய தூதரகங்களில் போய் மேற்படி Student Visa பெறுவதற்கான செயல்முறை ஆரம்பமாகிறது. இதற்கான அனுமதி (கனடாவுக்கு வெளியே இருந்து) கோரும்போது பின்வரும் பத்து விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதாக கனேடியக் குடிவரவு குடியகல்வு அமைச்சு அறிவுறுத்துகிறது.
  1. இந்த அனுமதி கிடைப்பதற்கான செயல்முறை எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருக்கும் கனேடியத் தூதரகத்தில் மாணவர் அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம். அதாவது, செப்ரெம்பரில் ஆரம்பமாகிற கற்கை நெறிக்கு ஒருவர் ஓகஸ்ற் 20ம் திகதிக்குப் பிறகு கொழும்பில் வைத்து விண்ணப்பித்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதையே அவர் சண்டிகாரில் விண்ணப்பித்தால், இரண்டு நாளைக்குள்ளாகவே அவரது விண்ணப்பம் மீதான சாதகமான முடிவு கிடைக்கலாம். (மேலதிக விபரங்கள் இங்கே)
  2. விசாவுக்கு உரிய விண்ணப்பப் படிவத்தைத் இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் கனேடியத் தூதரகங்களில் நேரடியாகப் போய்ப் பெற்றுக்கொள்ளலாம். இணையத்தில் உங்களுக்குத் தேவையான படிவங்களை pdf கோப்புகளாகத் தரவிறக்கும் வசதி கனடா குடிவரவு குடியகல்வு அமைச்சின் இணையத்தளத்தில் இருக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்வதற்குரிய அறிவுறுத்தல்களும் கூடவே இருக்கின்றன.
  3. அடுத்ததாக, எந்தக் கனேடியத் தூதரகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்யவேண்டும். உங்கள் நாட்டுக்கோ, அல்லது உங்கள் பிராந்தியத்துக்கோ பொறுப்பாக இருக்கிற ஒரு தூதரகத்தில் நீங்கள் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். கனடாவுக்கு வெளியே தூதரகங்கள் இருக்கும் இடங்களை இங்கே காணலாம்.
  4. Student Visa விண்ணப்பத்துக்குத் என்னென்ன ஆவணங்கள் தேவை என அறிந்து, அவற்றைச் சேர்க்கவேண்டும்.
  5. நீங்கள் படிப்பதற்காக அனுமதி பெற்றிருக்கும் கல்வி நிலையம் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் எனில், அதற்கென தனியான சில நடைமுறைகள் இருக்கின்றன. CAQ என்கிற ஒரு அனுமதிச் சான்றிதழை கியூபெக் மாநிலக் குடிவரவுத் திணைக்களத்தில் இருந்து பெறவேண்டி இருக்கும்.
  6. எல்லா ஆவணங்களையும் தயார்செய்து, விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுவிட்டீர்களா? இனிமேல் கவனமாக விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள். கறுத்த மையால் தெளிவாகவும், முழுமையாகவும், உண்மையாகவும் விண்ணப்பப் படிவத்தில் அவர்கள் கேட்டிருக்கும் விபரங்களை நிரப்புங்கள்.
  7. இந்த அனுமதிக் கோரிக்கைக்கு சில கட்டணங்கள் இருக்கின்றன. இணையம் மூலமாகவும் கட்டணம் செலுத்தப்படலாம். உறுதிப்படுத்திய காசோலை, வரைவோலை போன்ற முறைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் கணித்து, அவர்கள் சொல்கிற ஏதாவது ஒரு முறையில், உங்களுடைய நாட்டின் பணத்தில் இந்தக் கட்டணம் செலுத்தப்படலாம்.
  8. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது அவசியமாகிறது. அதற்கும் ஒரு படிவம் இருக்கிறது. அதன் மூலம், நீங்கள் தேவையான படிவங்கள், மற்றும் ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்திருக்கிறீர்களா என உறுதிசெய்து கொள்ளலாம்.
  9. இதன் பின்னர் உங்களுடைய படிவத்தை உரிய தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அமெரிக்கா, கிரீன்லாந்து, Saint Pierre and Miquelon ஆகிய நாடுகளின் பிரஜாவுரிமை உடையவர் என்றால், கனடாவிற்குள் எந்த வழியாக நுழைகிறீர்களோ அந்த வழியில் உள்ள எல்லைகளில் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உடனடியாகவே அனுமதி பெறலாம்.
  10. அதன் பின்னர், உங்கள் நாட்டுக் காவல்துறையினரிடம் பெறக்கூடிய சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழ் ஒப்படைக்கப்பட வேண்டும். பெரும்பாலான நாடுகளில் காவல்துறைச் சான்றிதழ் கோரப்படுவது இல்லை. (இலங்கையில் என்னிடம் கோரப்படவில்லை. ஆயினும் ஒன்றைக் காவலுக்காக எடுத்தேன். அது ஒரு பெரிய கதை). மருத்துவச் சான்றிதழ் கிட்டத்தட்ட எல்லா நாடுகளில் இருக்கும் தூதரகங்களாலும் கோரப்படுகிறது. மருத்துவச் சான்றிதழ் பெறுவது பற்றிய முழுமையான விபரங்களை இங்கேயும், காவல்துறைச் சான்றிதழ் பெறுவதற்கான முழுமையான நடைமுறைகளை இங்கேயும் காணலாம்.
அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முன்னர் செய்ய வேண்டியவை இவ்வளவும். விண்ணப்பித்த பின் என்ன நடக்கும், எனக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள், வரும் பதிவுகளில்.

நன்றி :கிருத்திகன் குமாரசாமி

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

நம்மில் பல விவசாயிகள் கால்நடைகள் வளர்ச்சி பற்றியான கவலையடைகின்றனர். அந்த கவலையை நீக்க கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

* கால்நடைகள் உலர் தீவனங்களை விட பசுந்தீவனங்களையே அதிகம் விரும்பி உண்கின்றன. இதனால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது. மேலும் பசுந்தீவனங்கள் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையவை. அதனால் சத்துக்கள் அதிக அளவில் உடலுக்கு கிடைக்கிறது.

* பசுந்தீவனங்களில் புரதம் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. இவைகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கும், அதிக பால் உற்பத்திக்கும் தேவைப்படுகின்றன.

* பசுந்தீவனங்களில் உயிர்சத்துகள் முக்கியமாக பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளது. இவைகள் விட்டமின் ஏ தேவையை நிவர்த்தி செய்வதோடு கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கிடேரிகள் 15, 18 மாதங்களில் பருவமடைந்து 200, 250 உடல் எடையும் கூடி 28, 30 மாதங்களில் முதல் கன்றை ஈனவும் பின்னர் 12, 14 மாத இடைவெளியில் மீண்டும் கன்றுகளை பெறவும் ஏதுவாகிறது.

* பசுந்தீவனங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றன. அதனால் உடல் ஆரோக்யம் மேம்படுவதோடு கால்நடைகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

* உலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களை சேர்த்துக் கொடுக்கும் போது உலர் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு செரிமான தன்மையும் கூடுகிறது.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கால்நடைகளில் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. அடர் தீவன செலவை 20 விழுக்காடு குறைக்கிறது.

என்னென்ன பசுந்தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்:

தானிய வகை:

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, ஓட்ஸ், திணை, சாமை.

பயிறு வகை:

குதிரைசால், வேலிமசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிபயறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, டெஸ்மோடியம்.

புல் வகைகள்:

நேப்பியர், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாபுல், எருமைப்புல், நீரடிப்புல், பாராப்புல், ரோட்ஸ்புல், ஆஸ்திரேலியாபுல், கொழுக்கட்டைபுல், நீலக்கொழுக்கட்டைபுல், மார்வல்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத்புல்.

மர இலைகள்:

அகத்தி, சுபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, முசுக்கொட்டை, வங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி.

நன்றி :தமிழ் சிகரம்

மேலதிக தகவலுக்கு :http://www.tamilsigaram.com/Linkpages/agri/agriculture.php


குமிழ் மரத்தின் எதிர்காலம்?

குமிழ் மரத்தின் எதிர்காலம்?

விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).

“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக் கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.

குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசா யிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

நன்றி :தமிழ் சிகரம்

சனி, 24 அக்டோபர், 2009

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...


ஆஸ்திரேலியாவில் மொத்தம் 55 பல்கலைக்கழகங்கள் எம்.பி.ஏ படிப்பைத் தருகின்றன. 16 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் எம்.பி.ஏவை ஒருவர் நிறைவு செய்ய முடியும். 2 ஆண்டுகள் பணம் கட்டி படிக்க முடியாதவர்களுக்கு 16 மாதங்களில் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கிடையே உள்ள கேம்ப்ஸ் ஏற்பாட்டின் மூலம் பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் மாறிச் சென்று படிக்கும் வசதி செய்து தரப்படுகிறது.ஆஸ்திரேலிய கல்விக்கட்டணம் பன்னாட்டு கல்வி கட்டணங்களோடு ஒப்பிடுகையில் குறைவு தான்.

ஐ.டி.பி என்பது இந்திய மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி பயில உதவும் தனிப்பட்ட அமைப்பு. இது டில்லி, சென்னை, சண்டிகார்,பெங்களுர், அகமதாபாத் மற்றும் ஐதராபாத்தில் அலுவலகங்களை கொண்டிருக்கிறது. இதில் கீழ்கண்ட உதவிகள் கிடைக்கும்.

அனைத்து பல்கலைகழகங்கள் பற்றிய தகவல்கள், சேர்க்கை தேதிகள், சேர்க்கை முறைகள், உதவித் தொகைகள், வங்கிக் கடன்கள் பற்றிய தகவல்கள், மற்றும் பெறும் முறைகள், மாணவருக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்துவது, தங்குமிடம், விமான பயணம் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இன்டர்நெட் முகவரி: http://www.india.idp.com/
இவற்றுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

பி.கு : இனவெறி பிடித்த இந்தியர்களை மட்டும்தாம் ஆஸ்திரேலியர்கள் தாக்குவார்கள் .

ஆகவே தயங்காமல் சென்று படிக்கலாம்.