ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

திங்கள், 26 அக்டோபர், 2009

ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம்

அன்புள்ள பதிவுலக தோழாமைக்கு www.iloveallaah.blogspot.com
வாழ்க வளமுடன்,உங்களது படைப்புகளின் சிறப்பு ஓங்குக ,யாம் ஒரு ஈழக்காதலன் .

உமது பணி தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாத தமிழ் பணி ,நீங்கள் எமக்காக ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம் .

அரபி இலக்கங்கள்( எண்கள் :1,2,3,4 ,,,,, ) பயன்பாடு உலகெங்கும் ஏற்றுகொள்ளபட்டிருப்பதாக இந்தியாவில் கற்பிக்க படுகிறது .ஆனால் அரபியர்கள் தங்கள் இலக்க பயன்பாட்டை இந்தியர்களிடம் கற்றத்தாக கூறுகின்றனர் .

அரபியர்கள் எண்களை கற்றபோது இந்தியாவே இல்லை .ஆகவே இந்த இலக்கமுறைகள்
சமஸ்கிருதம் மற்றும் உருது அடங்கிய இந்திய மொழிகுடும்பதிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை .ஆனால் தமிழ் (திராவிட) மொழிக்குடும்பத்தில் எண்ணுருக்கள் வெவ்வேறாக இருப்பினும் ஏறத்தாழ ஒரே உச்சரிப்பை கொண்டிப்பதால்
படிமம்:Tamil Numbers.JPG

இந்திய தேசிய அடிமைக்கல்வியின் மேல் எமது ஐயத்தை தெளிவு படுத்துமாறு
ஒரு பதிவில் ஆவணப்படுத்த வேண்டுகிறோம் .
ஈழத்தில் சந்திப்போம்,சிந்திப்போம் .

நன்றியுள்ள
சோழன்

ஓ... கனடா-4

முன்னைய பாகங்கள் இங்கே.My Photo

முகவர்களுக்குக் காசு கொடுத்து பெரிய தொகை ஒன்றையும், என்னுடைய வாழ்க்கையையும் பணயம் வைக்க உறவுகள் விரும்பாததால், அவர்கள் தேர்ந்து எடுத்த முறை படிப்பதற்காக என்று சொல்லி என்னை இலங்கையை விட்டு அப்புறப்படுத்துவது. அதற்கான வழிமுறை இவ்வாறாக இருந்தது.

முதலில் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறவேண்டி இருந்தது. என்னிடம் அதற்குரிய TOFEL, IELTS போன்ற ஆங்கிலத் தகைமகள் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய க.பொ.த. உயர்தர, சாதாரணதர பெறுபேற்று ஆவணங்களில் இருந்த ஆங்கிலத்துக்கான அதிவிசேட சித்தி அவர்களை ஏமாற்றிவிட்டது போலும், அனுமதி கிடைத்தது, ஷெரிடான் கல்லூரியில் மின் பொறியியல் (3 வருட டிப்ளோமா) படிக்க. அத்துடன் ஆறு மாதங்கள் ஆங்கிலமும் படிக்க வேண்டும். ஆக, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரியில் அனுமதி என்கிற கனேடிய குடிவரவு, குடியகல்வு அமைச்சின் முதலாவதும், முக்கியமானதுமான நிபந்தனையைச் செவ்வனே நிறைவேற்றியாயிற்று. இது பற்றிய விபரங்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகுதான் கனேடிய தூதரகங்களில் போய் மேற்படி Student Visa பெறுவதற்கான செயல்முறை ஆரம்பமாகிறது. இதற்கான அனுமதி (கனடாவுக்கு வெளியே இருந்து) கோரும்போது பின்வரும் பத்து விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதாக கனேடியக் குடிவரவு குடியகல்வு அமைச்சு அறிவுறுத்துகிறது.
  1. இந்த அனுமதி கிடைப்பதற்கான செயல்முறை எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருக்கும் கனேடியத் தூதரகத்தில் மாணவர் அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம். அதாவது, செப்ரெம்பரில் ஆரம்பமாகிற கற்கை நெறிக்கு ஒருவர் ஓகஸ்ற் 20ம் திகதிக்குப் பிறகு கொழும்பில் வைத்து விண்ணப்பித்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதையே அவர் சண்டிகாரில் விண்ணப்பித்தால், இரண்டு நாளைக்குள்ளாகவே அவரது விண்ணப்பம் மீதான சாதகமான முடிவு கிடைக்கலாம். (மேலதிக விபரங்கள் இங்கே)
  2. விசாவுக்கு உரிய விண்ணப்பப் படிவத்தைத் இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் கனேடியத் தூதரகங்களில் நேரடியாகப் போய்ப் பெற்றுக்கொள்ளலாம். இணையத்தில் உங்களுக்குத் தேவையான படிவங்களை pdf கோப்புகளாகத் தரவிறக்கும் வசதி கனடா குடிவரவு குடியகல்வு அமைச்சின் இணையத்தளத்தில் இருக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்வதற்குரிய அறிவுறுத்தல்களும் கூடவே இருக்கின்றன.
  3. அடுத்ததாக, எந்தக் கனேடியத் தூதரகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்யவேண்டும். உங்கள் நாட்டுக்கோ, அல்லது உங்கள் பிராந்தியத்துக்கோ பொறுப்பாக இருக்கிற ஒரு தூதரகத்தில் நீங்கள் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். கனடாவுக்கு வெளியே தூதரகங்கள் இருக்கும் இடங்களை இங்கே காணலாம்.
  4. Student Visa விண்ணப்பத்துக்குத் என்னென்ன ஆவணங்கள் தேவை என அறிந்து, அவற்றைச் சேர்க்கவேண்டும்.
  5. நீங்கள் படிப்பதற்காக அனுமதி பெற்றிருக்கும் கல்வி நிலையம் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் எனில், அதற்கென தனியான சில நடைமுறைகள் இருக்கின்றன. CAQ என்கிற ஒரு அனுமதிச் சான்றிதழை கியூபெக் மாநிலக் குடிவரவுத் திணைக்களத்தில் இருந்து பெறவேண்டி இருக்கும்.
  6. எல்லா ஆவணங்களையும் தயார்செய்து, விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுவிட்டீர்களா? இனிமேல் கவனமாக விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள். கறுத்த மையால் தெளிவாகவும், முழுமையாகவும், உண்மையாகவும் விண்ணப்பப் படிவத்தில் அவர்கள் கேட்டிருக்கும் விபரங்களை நிரப்புங்கள்.
  7. இந்த அனுமதிக் கோரிக்கைக்கு சில கட்டணங்கள் இருக்கின்றன. இணையம் மூலமாகவும் கட்டணம் செலுத்தப்படலாம். உறுதிப்படுத்திய காசோலை, வரைவோலை போன்ற முறைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் கணித்து, அவர்கள் சொல்கிற ஏதாவது ஒரு முறையில், உங்களுடைய நாட்டின் பணத்தில் இந்தக் கட்டணம் செலுத்தப்படலாம்.
  8. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது அவசியமாகிறது. அதற்கும் ஒரு படிவம் இருக்கிறது. அதன் மூலம், நீங்கள் தேவையான படிவங்கள், மற்றும் ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்திருக்கிறீர்களா என உறுதிசெய்து கொள்ளலாம்.
  9. இதன் பின்னர் உங்களுடைய படிவத்தை உரிய தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அமெரிக்கா, கிரீன்லாந்து, Saint Pierre and Miquelon ஆகிய நாடுகளின் பிரஜாவுரிமை உடையவர் என்றால், கனடாவிற்குள் எந்த வழியாக நுழைகிறீர்களோ அந்த வழியில் உள்ள எல்லைகளில் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உடனடியாகவே அனுமதி பெறலாம்.
  10. அதன் பின்னர், உங்கள் நாட்டுக் காவல்துறையினரிடம் பெறக்கூடிய சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழ் ஒப்படைக்கப்பட வேண்டும். பெரும்பாலான நாடுகளில் காவல்துறைச் சான்றிதழ் கோரப்படுவது இல்லை. (இலங்கையில் என்னிடம் கோரப்படவில்லை. ஆயினும் ஒன்றைக் காவலுக்காக எடுத்தேன். அது ஒரு பெரிய கதை). மருத்துவச் சான்றிதழ் கிட்டத்தட்ட எல்லா நாடுகளில் இருக்கும் தூதரகங்களாலும் கோரப்படுகிறது. மருத்துவச் சான்றிதழ் பெறுவது பற்றிய முழுமையான விபரங்களை இங்கேயும், காவல்துறைச் சான்றிதழ் பெறுவதற்கான முழுமையான நடைமுறைகளை இங்கேயும் காணலாம்.
அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முன்னர் செய்ய வேண்டியவை இவ்வளவும். விண்ணப்பித்த பின் என்ன நடக்கும், எனக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள், வரும் பதிவுகளில்.

நன்றி :கிருத்திகன் குமாரசாமி

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

நம்மில் பல விவசாயிகள் கால்நடைகள் வளர்ச்சி பற்றியான கவலையடைகின்றனர். அந்த கவலையை நீக்க கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

* கால்நடைகள் உலர் தீவனங்களை விட பசுந்தீவனங்களையே அதிகம் விரும்பி உண்கின்றன. இதனால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது. மேலும் பசுந்தீவனங்கள் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையவை. அதனால் சத்துக்கள் அதிக அளவில் உடலுக்கு கிடைக்கிறது.

* பசுந்தீவனங்களில் புரதம் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. இவைகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கும், அதிக பால் உற்பத்திக்கும் தேவைப்படுகின்றன.

* பசுந்தீவனங்களில் உயிர்சத்துகள் முக்கியமாக பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளது. இவைகள் விட்டமின் ஏ தேவையை நிவர்த்தி செய்வதோடு கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கிடேரிகள் 15, 18 மாதங்களில் பருவமடைந்து 200, 250 உடல் எடையும் கூடி 28, 30 மாதங்களில் முதல் கன்றை ஈனவும் பின்னர் 12, 14 மாத இடைவெளியில் மீண்டும் கன்றுகளை பெறவும் ஏதுவாகிறது.

* பசுந்தீவனங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றன. அதனால் உடல் ஆரோக்யம் மேம்படுவதோடு கால்நடைகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

* உலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களை சேர்த்துக் கொடுக்கும் போது உலர் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு செரிமான தன்மையும் கூடுகிறது.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கால்நடைகளில் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. அடர் தீவன செலவை 20 விழுக்காடு குறைக்கிறது.

என்னென்ன பசுந்தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்:

தானிய வகை:

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, ஓட்ஸ், திணை, சாமை.

பயிறு வகை:

குதிரைசால், வேலிமசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிபயறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, டெஸ்மோடியம்.

புல் வகைகள்:

நேப்பியர், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாபுல், எருமைப்புல், நீரடிப்புல், பாராப்புல், ரோட்ஸ்புல், ஆஸ்திரேலியாபுல், கொழுக்கட்டைபுல், நீலக்கொழுக்கட்டைபுல், மார்வல்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத்புல்.

மர இலைகள்:

அகத்தி, சுபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, முசுக்கொட்டை, வங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி.

நன்றி :தமிழ் சிகரம்

மேலதிக தகவலுக்கு :http://www.tamilsigaram.com/Linkpages/agri/agriculture.php


குமிழ் மரத்தின் எதிர்காலம்?

குமிழ் மரத்தின் எதிர்காலம்?

விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).

“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக் கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.

குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசா யிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

நன்றி :தமிழ் சிகரம்

சனி, 24 அக்டோபர், 2009

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...


ஆஸ்திரேலியாவில் மொத்தம் 55 பல்கலைக்கழகங்கள் எம்.பி.ஏ படிப்பைத் தருகின்றன. 16 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் எம்.பி.ஏவை ஒருவர் நிறைவு செய்ய முடியும். 2 ஆண்டுகள் பணம் கட்டி படிக்க முடியாதவர்களுக்கு 16 மாதங்களில் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கிடையே உள்ள கேம்ப்ஸ் ஏற்பாட்டின் மூலம் பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் மாறிச் சென்று படிக்கும் வசதி செய்து தரப்படுகிறது.ஆஸ்திரேலிய கல்விக்கட்டணம் பன்னாட்டு கல்வி கட்டணங்களோடு ஒப்பிடுகையில் குறைவு தான்.

ஐ.டி.பி என்பது இந்திய மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி பயில உதவும் தனிப்பட்ட அமைப்பு. இது டில்லி, சென்னை, சண்டிகார்,பெங்களுர், அகமதாபாத் மற்றும் ஐதராபாத்தில் அலுவலகங்களை கொண்டிருக்கிறது. இதில் கீழ்கண்ட உதவிகள் கிடைக்கும்.

அனைத்து பல்கலைகழகங்கள் பற்றிய தகவல்கள், சேர்க்கை தேதிகள், சேர்க்கை முறைகள், உதவித் தொகைகள், வங்கிக் கடன்கள் பற்றிய தகவல்கள், மற்றும் பெறும் முறைகள், மாணவருக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்துவது, தங்குமிடம், விமான பயணம் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இன்டர்நெட் முகவரி: http://www.india.idp.com/
இவற்றுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

பி.கு : இனவெறி பிடித்த இந்தியர்களை மட்டும்தாம் ஆஸ்திரேலியர்கள் தாக்குவார்கள் .

ஆகவே தயங்காமல் சென்று படிக்கலாம்.


சனி, 17 அக்டோபர், 2009

மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!

மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!




உலக வரலாற்றில் பல பல பிரமாண்ட வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த மனித சமுதாயம் கண்டு முதலில் ஆற்றாமையில் வெறுத்தும் பின்னர் வியந்தும் தான் ஏற்று கொண்டிருக்கிறது. விமானம் கண்டு பிடித்த ரைட் சகோதரர்களும் சரி, மகிழுந்தை நமக்கு கொடுத்த ஹென்றி போர்ட் ஆக இருந்தாலும் இதே நிலை தான்...
முதலில் வெறுத்து ஒதுக்கிய அதே சமுதாயம் மெல்ல மெல்ல அவர்களை அங்கீகரித்து அவர்களது கண்டுபிடிப்பை ஒத்து கொண்டது!

நல்லா வேலை இந்த நிலை TERRAFUGIA நிறுவனத்துக்கு வரவில்லை. வெற்றிகரமாக தங்கள் முதல் கட்ட சோதனையை செய்து முடித்துள்ளனர்.... எதை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம்? இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டு மசாசுசெட்ஸ் பல்கலைகழகத்தில் பயிற்சி பெற்ற விமான பொறியாளர்கள் மற்றும் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்ற சில நண்பர்கள் கூடி இந்த நிறுவனத்தை துவக்கி வைத்தனர்..... இவர்கள் செய்து முடித்து இருக்கின்ற சோதனை முயற்சி, தரையிலும் வானத்திலும் ஓடக்கூடிய ஒரு விமானம் மற்றும் மகிழுந்து...

இதை இயக்க மேலும் 20 மணி நேரம் இவர்கள் விமானம் ஓட்டும் முறையை பயிற்று விக்கின்றனர். முன்பே விமானம் ஓட்ட தெரிந்திருந்தால் இந்த வண்டியை வாங்கும் பொழுது இதற்கான பயிற்சியை மட்டும் அளிக்கின்றனர்.... மேலும் இந்த வண்டியின் தொழில்நுட்ப விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள முகவரியை சொடுக்கவும்!

இந்த வண்டியின் விலையை தான் தீபாவளி வானவேடிக்கை போல் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது..... ம்ம்ம்ம் அறிமுக விலை ஒரு லட்சத்தி தொண்ணூற்று நான்காயிரம் அமெரிக்க டாலர்களாம்!!!

யோசித்து பார்த்தால் இந்த வண்டி அதிகமாய் புழக்கத்திற்கு வந்து விட்டால், 'சரக்கனு கதவ துறந்துட்டு போய் வானத்துல இருக்கறப்ப, 'ஏன்டா கண்ண எங்க வெச்சிக்கிட்டு ஓட்டற' அப்டின்னு ஏக வசனம்லாம் பேச முடியாது'.... கொஞ்சம் போக்கு வரத்து நெரிசல் தரயில குறையலாம்..... கொஞ்சம் வானத்துல அதிகம் ஆகலாம்.... மேலே பறக்கும் காவல் படை போட்டு கண்காணிக்கலாம்..... தரையில கார்னு சொல்லி ஓட்டுனர் உரிமம் கேக்கும் போது, இறக்கையை விரித்து பறந்து கொஞ்சம் ஜகா வாங்கலாம்.... சரி சரி இப்படி நிறைய விடயங்கள் யோசித்து பார்க்கலாம்..... இத்துடன் இந்த பதிவை முடித்தும் கொள்ள(ல்ல)லாம்!!!

நன்றி :

வயலுக்கு உரம் அடிக்கும் நாயகன் !


வயலுக்கு உரம் அடிக்கும்சினிமா ஹீரோ!

ஒரு லட்சம் கொடுத்தால் கூட இன்னைக்கு அந்த ஹீரோ வர மாட்டார் என்றார் டைரக்டர் சுந்தரன். இவர் சொன்ன அந்த ஹீரோவுக்கு இந்த பிரஸ் மீட்டை விட முக்கியமான வேலை ஒன்று இருந்தது. அது....?

வயலுக்கு உரம் அடிக்கிற வேலை!

கடலுருக்கு பக்கத்தில் இருக்கிறது திட்டக்குடி என்ற கிராமம். இங்கு பெரும்பாலானவர்களின் வேலை மழை வந்தால் விவசாயம். இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களுக்கு போய் கொத்தனார் வேலை பார்ப்பது. சுந்தரன் இயக்கி வரும் திட்டக்குடி என்ற படத்தின் ஹீரோ, ஒரு விவசாயி. கதையில் இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாக நடித்திருக்கிறார். கிராமத்தில் நடக்கும் இந்த கதைக்கு தலைநகரத்தில் எதற்கு ஆபிஸ் போட வேண்டும்? அதனால் படப்பிடிப்பு நடக்கும் கடலுரிலேயே எங்கள் சினிமா அலுவலகத்தை அமைத்தோம். இதே ஊரை சேர்ந்த ரவி என்ற இளைஞரையே ஹீரோவாகவும் ஆக்கிவிட்டோம். ஆரம்பத்தில் தயங்கிய ரவி, பிறகு கதையில் லயித்துப் போய் அற்புதமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு ஹீரோ அந்தஸ்தை நாங்கள் கொடுத்தாலும் ஷட்டிங் இல்லையென்றால் அவர் வயல்வேலைக்கு போய்விடுவார்.

இப்போது கூட இந்த பிரஸ்மீட்டுக்கு வரும்படி அவரை அழைத்தோம். வயலுக்கு உரம் அடிச்சிட்டு இருக்கேன். நான் எங்கே வர்றது? என்று கூறிவிட்டார் என்று நமக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறார் சுந்தரன். இவர்தான் இப்படி என்றால் படத்தின் நாயகி அஸ்வதாவுக்கும் இந்த படத்தில்தான் பெரிய கேரக்டர். இதற்கு முன் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறாராம்.

ஒரு சித்தாள், மேஸ்திரியின் கதையை இயல்பாக சொல்லியிருக்கேன். யதார்த்த படங்களை ரசிக்கிற ஜனங்கள் இந்த படத்திற்கும் பாஸ் மார்க் போடுவார்கள் என்றார் சுந்தரன்.

இவங்களோட புதிய சிந்தனைக்காகவே புல் மார்க் போடலாம்!

MBA படிக்க போறீங்களா?

ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:

MBA வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க.


எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:


  • CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள்
  • TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)
  • All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது
  • IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது
  • ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது
மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும் IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது PGDBA/PGDBM அவ்வளவே.

முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும்.

ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

  • Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும்.
  • Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்
  • Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா நல்லது
  • Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும்
சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும் இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க.

அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.

நன்றி :நாஸியா உங்கள் சகோதரி! :)

செவ்வாய், 13 அக்டோபர், 2009

உலக தொலைக்காட்சிகள் வரலாற்றில் முதல் முறையாக ராவின்(கிலி) "தமிழ் கிலி DANGER டிவி"

+
உலக தொ லைக் காட்சிகள் வரலாற்றில் முதல் முறையாக ராவின்(கிலி) (அயல்நாட்டு|(இலங்கை) இந்திய ஓலவுத்துர்ரை) பெருமையுடன் வயங்கும் .இலங்கையிலிருந்து நடாத்தும் ஒரே சுயாதினமான தமிழ் தொல்லைக்காட்சி.

தொலைக்காட்சி முயக்கம் :("திரைகடல் ஓடியும் தமிழினம் அழிப்போம் ").

முழு நேர தமிழ் கிலி செய்மதி தொலைக்கா ட்சி கொயிம்பிலிருந்து .வாங்கிய காசுக்கு வாந்திஎடுக்கிறது ,உளவாளிகளும் ,கயவாளிகளும் எம்பட சனங்களின் வரலாற்று பிழைகளை கதைக்கினம் ,தொடர்களும் புத்தம் புதுசாய் பொதிகையிலிருந்து எப்படி கிடக்கினம் .
இந்த தொலைக்காட்சி சன் டிவி ,நம் சொந்தக்கார டிவிக்கேல்லாம் அல்வா கொடுத்துவிட்டு ரொம்ப புதிய புதிய அந்தாக்சரி ,சீரியலேல்லாம் .பொதிகையிலிருந்து போடுவினம் (ரொம்ப கவனமாக பொதிகை இலசினனைகளை வெட்டி ஒட்டினாலும்
கூலிக்கு மாரடிக்கும் கும்பல் செய்யும் தொழிலை சிறப்பாக செய்யாததால் .நமது உளவுப்படை கிலியின் கைவண்ணத்தை உறுதிபடுதிகொண்டது.

நம்ப நாராப்பயல் ஒரு விமானம் முயுக்க புதிய பொதிகை சூப்பர் ஹிடையேல்லாம் எல்லாம் கொடுத்து உதவியதாக நோந்திய முகவர் தெரிவித்துள்ள போதிலும் .கொயும்புவில் உள்ள ,
நமது கூலிக்கு குறைக்கும் டக்லஸ் பிரமேனந்த மற்றும் நம் உயவினர்கலேல்லாம்
காசு பார்ப்பதாக ,வரலாற்றை திரிப்பதாகவும் உலகெங்கும் உள்ள இரும்பொறைகள்
உறுதி செய்கின்றனர்

ஆகவே புலம்பெயர்ந்த தமிழர்களே ! உயிரை இழந்தாலும் ,உரிமையை ,,,,,,,,,,,,,,,,

நன்றி :உளவு களம் .

அறிஞ்சொர்ப்பொருள் வயன்குவர்களுக்கு அறிவாளிப்படையில் சேர்த்துக்கொள்வோம் :
கொயும்பு -
டக்லஸ் பிரமேனந்த-
நம்பநாராப்பயல்-
நோந்திய-
தமிழ் கிலி-
இந்திய ஓலவுத்துர்ரை-
ராவின்(கிலி) -
பி.கு :கிலியாடிக்கும் முன்னே புலியடிக்கும்

சனி, 10 அக்டோபர், 2009

கடவுச்சீட்டு விண்ணப்ப பதிவில் புதிய வசதி

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவில் புதிய வசதி சென்னை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பிராந்திய துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் கூறியிருப்பதாவது,

தட்கல் முறையிலும், சாதாரண முறையிலும் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளை சீரமைத்துள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்ழூட்டர் ஒதுக்கும் தேதியில் மட்டுமே விண்ணப்பங்களை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், திரும்பவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் கம்ப்ழூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.

பாஸ்போர்ட்டை விரைவாக பெற்றுத் தருவதாகச் சொல்லி தவறான வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

மக்களின் தலைவர் சாமிக்கண்ணு!!நன்றி: இரத்தினபுகழேந்தி

[samikanu.JPG]


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.

நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,