மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. கடந்த 2008ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர். இதில் 11,849 பேரே வெற்றி பெற்றனர்.
இவர்களில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் இப்போது 791 பேர் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகப் பதவிகளை ஏற்க உள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள்
இந்த 791 பேரில் 96 மாணவ, மாணவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தேசிய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 3 பேர் சென்னை
இவர்களில் சென்னை
இதையடுத்து சென்னை
மனித நேயம் அமைப்பை அதிமுக பிரமுகரான சைதை சா.துரைசாமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் பொதுத் தொண்டில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார்.
மொத்தத்தில் தமிழத்தைப் பொறுத்தவரை கணேஷ் பயிற்சி மையத்தில் பயின்ற 30 பேரும், மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 24 பேரும், சங்கர், சத்யா உள்ளிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
329வது ரேங்க் பிடித்த ஆசிரியை...
இந்தத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரேமி தேசிய அளவில் 329வது ரேங்க்கை பிடித்துள்ளார். இவர் மாத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.
இவர் சென்னை
விவசாயி மகன்...
அதே போல மேட்டூர் அணை அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் 345வது ரேங்க்கைப் பெற்றுள்ளார். இவர் கோவை உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்தவர்.
இவர் சென்னை
நன்றி :http://thatstamil.oneindia.in/news/2009/05/05/tn-96-students-from-tn-get-through-ias-exams.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக