ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

நம்மில் பல விவசாயிகள் கால்நடைகள் வளர்ச்சி பற்றியான கவலையடைகின்றனர். அந்த கவலையை நீக்க கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

* கால்நடைகள் உலர் தீவனங்களை விட பசுந்தீவனங்களையே அதிகம் விரும்பி உண்கின்றன. இதனால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது. மேலும் பசுந்தீவனங்கள் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையவை. அதனால் சத்துக்கள் அதிக அளவில் உடலுக்கு கிடைக்கிறது.

* பசுந்தீவனங்களில் புரதம் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. இவைகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கும், அதிக பால் உற்பத்திக்கும் தேவைப்படுகின்றன.

* பசுந்தீவனங்களில் உயிர்சத்துகள் முக்கியமாக பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளது. இவைகள் விட்டமின் ஏ தேவையை நிவர்த்தி செய்வதோடு கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கிடேரிகள் 15, 18 மாதங்களில் பருவமடைந்து 200, 250 உடல் எடையும் கூடி 28, 30 மாதங்களில் முதல் கன்றை ஈனவும் பின்னர் 12, 14 மாத இடைவெளியில் மீண்டும் கன்றுகளை பெறவும் ஏதுவாகிறது.

* பசுந்தீவனங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றன. அதனால் உடல் ஆரோக்யம் மேம்படுவதோடு கால்நடைகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

* உலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களை சேர்த்துக் கொடுக்கும் போது உலர் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு செரிமான தன்மையும் கூடுகிறது.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கால்நடைகளில் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. அடர் தீவன செலவை 20 விழுக்காடு குறைக்கிறது.

என்னென்ன பசுந்தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்:

தானிய வகை:

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, ஓட்ஸ், திணை, சாமை.

பயிறு வகை:

குதிரைசால், வேலிமசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிபயறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, டெஸ்மோடியம்.

புல் வகைகள்:

நேப்பியர், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாபுல், எருமைப்புல், நீரடிப்புல், பாராப்புல், ரோட்ஸ்புல், ஆஸ்திரேலியாபுல், கொழுக்கட்டைபுல், நீலக்கொழுக்கட்டைபுல், மார்வல்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத்புல்.

மர இலைகள்:

அகத்தி, சுபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, முசுக்கொட்டை, வங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி.

நன்றி :தமிழ் சிகரம்

மேலதிக தகவலுக்கு :http://www.tamilsigaram.com/Linkpages/agri/agriculture.php


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக